Saturday, December 30, 2006

ஒரு பரத நாட்டிய ஒளிப்படம்[video-clip]

அண்மையில் நான் பார்த்து இரசித்த பரத நாட்டியக் காட்சி இது. இந் நிகழ்ச்சி லண்டன் TTN [Thamil Television Network] தொலைக்காட்சி நிலையத்தினரது தயாரிப்பு. இதே பாடலுக்கு இங்கே கனடாவிலும் கடந்த மாதம் சில பெண்கள் பரத நாட்டியம் ஆடியதை நேரில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் அதிகமான பரத நாட்டியங்கள் தமிழ்ப்பாடல்களுக்கே ஆடப்படும். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இன்னுமொரு விடயம், எமது பெம்பிளைப் பிள்ளைகளை[பெண்கள்] நெடுகலும் [தொடர்ந்து] மேற்கத்தைய ஆடைகளிலேயே பார்ப்பதாலோ என்னவோ, அவர்களை இப்படிச் சேலை மற்றும் ஆபரணங்களுடன் பார்க்கும் போது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். இக் கோலத்தில் அவர்களைப் பார்ப்பதற்காகவே கோவில்களுக்கும் இப்படியான நிகழ்வுகளுக்கும் போய்வருவதை மறுக்கவா முடியும்? :))

சரி, நீங்களும் இந்த அருமையான நடனத்தைக் கண்டு மகிழ இங்கே கிளிக் செய்யவும்.[Load ஆக கொஞ்ச நேரம்(சில வினாடிகள்) எடுக்கும். தயவு செய்து பொறுமை காத்துக் கொள்ளவும்]

Wednesday, December 13, 2006

Anonymous எனும் பதிவருக்கு என் பதில்

Anonymous எனும் பெயரில் எழுதும் அன்பர் ஒருவர் "புலிகளைக் கண்டு பார்ப்பனர் நடுக்கம்" எனும் தலைப்பில் ஒரு பதிவு போட்டுள்ளார்கள். ஈழத் தமிழர்கள் மீதான அவரின் கரிசனைக்கு ஒரு ஈழத்தமிழன் எனும் வகையில் அவருக்கு நன்றி சொல்லுகிறேன். அதேநேரம், அவரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் கருத்தை அவ்ரின் பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.தேவை கருதி அதை இங்கேயும் தனிப்பதிவாகத் தருகிறேன்.


ஐயா,
தேவையற்ற பதிவு. தமிழகப் பிரச்சனைகளோடு ஈழப் பிரச்சனையை தயவு செய்து முடிச்சுப் போடாதீர்கள் என ஈழத்தமிழன் என்ற வகையில் கேட்டுக் கொள்கிறேன்.

ஐயா, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி, தமிழீழ மக்களும் சரி தமது எதிரி யார் நண்பர் யார் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எனவே தயவு செய்து தேவையில்லாமல், எழுத வேண்டும் என்பதற்காக எதையோ எழுதி , தமிழக மக்களைக் குழப்பி எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஈழத்தில் இப்படியான பார்ப்பனன், ஆரியன் , திராவிடன் எனும் அரசியல் குழப்பங்கள் இல்லை என்பதையும் இங்கே உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.
மிக்க நன்றி.

Sunday, October 08, 2006

உலகின் அதி சிறந்த பல்கலைக்கழகங்கள் [Top Universities]

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதி சிறந்தவை[top] எவையென வருடாந்தம் நடாத்தப்படும் rankings[இச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் என்ன] சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.

நான் படித்த பல்கலைக்கழகம் 27 வது இடத்திலிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி.

உலக பல்கலைக்கழக rankings [World University Rankings] பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tuesday, October 03, 2006

புனித பாப்பரசரும் சீக்கிய மக்களும்

அன்பர்களே, பாப்பரசரையோ, கிறிஸ்தவ மதத்தவர்களையோ அல்லது சீக்கிய மக்களையோ எள்ளி நகையாடுவதற்காகப் போடப்படும் பதிவல்ல இது. இப்பதிவின் மூலம் யாருக்காவது மனம் புண்படுமாயின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். உடனடியாக இப்பதிவை நீக்கிவிடுகிறேன்.

மும்பாயில் வசிக்கும் என் நண்பன் இன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பகிடிக்[நகைச்சுவை/தமாஷ்] கதை இது. இக் கதையை பலர் ஏற்கனவே படித்திருக்கலாம். மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்திலேயே வெட்டி ஒட்டுகிறேன்.


About a century or two ago, the Pope decided that all the Sikhs had to leave Italy. Naturally there was a big uproar from the Sikh community.

So the Pope made a deal. He would have a religious debate with a member of the Sikh community. If the Sikh won, the Sikhs could stay.

If the Pope won, the Sikhs would leave.

The Sikhs realized that they had no choice. So they picked a middle-aged man named Harbinder Singh to represent them. Harbinder asked for one additional condition to the debate. To make it more interesting, neither side would be allowed to talk.

The Pope agreed.

The day of the great debate came. Harbinder Singh and the Pope sat opposite each other for a full minute. Then the Pope raised his hand and showed three fingers.

Harbinder looked back at him and raised one finger.

The Pope waved his fingers in a circle around his head.

Harbinder pointed to the ground where he sat.

The Pope pulled out a wafer and a glass of wine.

Harbinder pulled out an apple.

The Pope stood up and said, "I give up. This man is too good. The Sikhs can stay."

An hour later, the cardinals were gathered around the Pope asking him what had happened.

The Pope said, "First I held up three fingers to represent the holy trinity.

He responded by holding up one finger to remind me that there was still One God common to both our religions.

Then, I waved my finger around me to show him that God was all around us.

He responded by pointing to the ground and showing that God was also right here with us.

Then, I pulled out the wine and wafer to show that God absolves us from our sins.

He pulled out an apple to remind me of original sin. He had an answer for everything. What could I do?"

Meanwhile, the Sikh community had crowded around Harbinder Singh. "What happened?" they asked.

"Well," said Harbinder, "First he said to me that the Sikhs had three days to get out of here.

I told him not one of us was leaving.

Then he told me that this whole city would be cleared of Sikhs.

I let him know that we were staying right here."

"Yes, and then???" asked the crowd.

"I don't know", said Harbinder, "He took out his lunch, and I took out mine!!

Friday, September 29, 2006

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- [கவிதை]

அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது
?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

பிற்குறிப்பு:
[1]இக் கவிதையைப் புனைந்தவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். "ஒரு ஈழப் போராளிக்குக் காதலியின் கடிதம்" எனும் பொருளில் எழுதப்பட்டது.
[2]மேலே இணைக்கப்பட்ட படம் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு சிங்கள அரசின் எதுவித உதவியுமில்லாமல் அகதிமுகாம்களில் வாழும் தமிழ்பிஞ்சுகள். இப் படம் இணையத்தில் இருந்து சுடப்பட்ட படம். நான் எடுத்த படமல்ல.

Wednesday, September 27, 2006

படமும் கதையும் - 2

(படத்தைப் பெரிது படுத்திப் பார்க்க படத்தில் கிளிக் செய்யுங்கள்)

மேலே உள்ள படத்தை பறவைக் காவடி அல்லது தூக்குக்காவடி என்று ஈழத்தில் சொல்வார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தாவடி-சுதுமலை வீதியில் இப் படம் எடுக்கப்பட்டது. சுதுமலை அம்மன் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுதுமலை அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனைத் தீர்ப்பதற்காக இந்த தூக்குக்காவடியை எடுக்கிறார் இப் பக்தர். இத் தூக்குக்காவடி பனைமரத்தில் இருந்து உருவாக்கிய வளைகளால் செய்யப்பட்டது.

பி.கு:- நான் இப்படத்தை எடுக்கவில்லை. இணையத்தில் இருந்து எடுத்த படம் இது.

Sunday, September 24, 2006

படமும் கதையும் - 1

இது ஈழத்தில் எனது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது நான் எடுத்த படம். ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம். ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.

Saturday, September 16, 2006

தீபாவளி : வாரியார் விளக்கம்.

தீபாவளி

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

  1. சோமவார விரதம்
  2. உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
  3. திருவாதிரை விரதம் (மார்கழியில்)
  4. சிவராத்திரி விரதம் (மாசியில்)
  5. கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
  6. பாசுபத விரதம் (தைப்பூசம்)
  7. அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
  8. கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)

தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை

புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

Sunday, September 10, 2006

மனதைப் பாதித்த பதிவு

நேற்று இப்பதிவைப் படித்ததிலிருந்து மனதில் ஏதோ ஒருவித சோகம் சூழ்ந்து கொண்டது. தமிழகத்தில்தான் இக் கொடுமை நடக்கிறது என்பதை அறிந்ததும் சோகம் இன்னும் இரட்டிப்பானது. அதுவும் தாம் பெரியாரின் வாரிசுகள் ,அண்ணாவின் வாரிசுகள் என்று மார்புதட்டிக் கொள்பவர்களினால்தான் தமிழகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறது. இருந்தும் இப் பாதகச் செயல்கள் இன்றும் அதாவது 21ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருப்பது மனவேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது. உலகில் வாழும் தமிழர்கள் அனைவரையும் நாணித்தலைகுனிய வைக்கும் செயல்.

சக வலைப்பதிவ நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் தனது தளத்தில் மேலளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள் எனும் தலைப்பில் தமிழகத்தில் நடந்தேறும் இவ் அநாகரீகச் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று செய்தியாகப் பதிந்துள்ளார்.

மனிதநேயம் உள்ள அன்பர்கள் அனைவரும் இப் பதிவைக் கட்டாயம் படிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். படித்துவிட்டு , இக் கொடுமைகளைத் தடுக்க தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் பற்றி ஒரு சில வரிகள்( இவை அவரின் Profileல் அவரே சொல்லியுள்ளவை):
தமிழகம், புதுவையில் மனித உரிமை தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது வீரப்பனை காட்டில் சென்று சந்தித்து, ராஜ்குமாரை மீட்ட மூவர் குழுவில் இடம் பெற்றவர்.

Monday, September 04, 2006

யாழ்ப்பாண ஊர்கள் வரலாறு -- திருநெல்வேலி - பகுதி-2

சென்ற பதிவில் [யாழ்ப்பாண ஊர்கள் சில - பகுதி-1] யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களை வரிசைப்படுத்தியிருந்தேன். அவையாவன:

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இப் பதிவில் திருநெல்வேலி எனும் பெயர் அவ்விடத்துக்கு வந்த காரணத்தை நோக்குவோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நல்லூர் உதவி அரச அதிபர் பிரிவில் திருநெல்வேலி அமைந்துள்ளது. இதன் எல்லைப் பகுதிகளாக கொக்குவில், கோண்டாவில், நல்லூர் எனும் இடங்கள் அமைந்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி = திரு + நெல் + வேலி எனக் கூறுகிறார்.

திருநெல்வேலி பற்றிய மரபுக் கதையைப் பார்க்க முன் , இந்த வேலி எனும் சொல் இடப்பெயர்களின் ஈற்றுப் பெயராக எப்படி வந்திருக்கக்கூடும் என்பதை கலாநிதி இ. பாலசுந்தரம் இப்படி விளக்குகிறார்:

"வேலி என்பது = முள், கழி முதலியவற்றாலான அரண், மதில், காவல், நிலம், வயல், ஒரு நில அளவு (6.74 ஏக்கர்), பசுக் கொட்டில், காற்று எனப்பொருள்படும். வேலி பழந்தமிழ்ச் சொல் என்பதும், நிலங்களுக்கு எல்லையாக வேலி அமைக்கும் மரபு பண்டைநாள் முதலாக இருந்துள்ளது என்பதும் ("வேரல வேலி வேர்க்கோட்பலவு" - குறுந்தொகை : 8) தமிழர் பண்பாட்டில் அறியப்படும் செய்திகளாகும். முன்னர் எல்லையைச் சுட்டிய வேலி என்ற சொல், சோழர் காலத்தில் நில அளவைப் பொருளாக வளர்ச்சி பெற்றுள்ளது. வேலி என்பது சோழர் காலத்து நில அளவுப் பெயர்களில் ஒன்று என்பதைப் பின்வரும் கல்வெட்டுச் சான்றுபடுத்துகின்றது.

"உடையார் சிறீ ராஜராஜீச்சுரம்
உடையார்க்கு நிவந்தக் காரராக
நிவந்தமாய் பங்குசெய்தபடி பங்குவழி
ஒன்றினால் நிலன்வேலியினால்."
[நாகசாமி(பதிப்பு) தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டு:1:52-55)

ஊராட்சி முறையில் ஊர்களுக்கு எல்லை வகுக்கும் போது இயற்கை, செயற்கை நிலைகளில் "வேலி" எனப் பெயர் வைக்கப்பட்டது. அத்துடன் "நிவந்தம்" அல்லது "இறையிலி" நிலம் அரசனால் வழங்கப்பட்ட போது, 'வேலி' என்ற அடிப்படையிலும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டமையும் நோக்கற்பாலது." (கலாநிதி இ.பாலசுந்தரம், பக்.318)

நான் ஏற்கனவே எனது சென்ற பதிவில் கூறியிருந்தது போல், அக்காலத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஈழ மண்டலத்தின் பல பகுதிகளிலும் குடியேறினர், அல்லது குடியேற்றப்பட்டனர். யாழ்ப்பாடி எல்லாள மன்னனிடமிருந்து யாழ்ப்பணத்தைப் பரிசாகப் பெற்று அங்கு 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து இறந்த பின்னர் சோழ மண்டல அரசனின் மைந்தன் திருவாரூரில் இருந்து வந்து யாழ்ப்பாண அரசனாகப் பொறுப்பேற்று பல துறையைச் சார்ந்தவர்களையும் தமிழகத்திலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியமர்த்தினான் என 1915ம் ஆண்டில் வெளிவந்த யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்

"...வேங்கடகிரியைத் தனக்குச் சன்மஸ்தானமாகவுடைய பாண்டிமழவனை(மழவராயனை)யும் அவன் தம்பியையும் அவன் மைத்துனன் செம்பழகவனையும் திருநெல்வேலியிலிருத்தினான்." (யாழ்ப்பாணச் சரித்திரம், 1915, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பக்.18)

"தமிழகத்திலுள்ள திருநெல்வேலி என்ற இடத்திலிருந்து வந்த மக்கள் இங்கு குடியேறியபோது இப்பெயரை இட்டு வழங்கினர் என்பது மரபு. திருநெல்வேலியின் கிழக்கே குளமும் வயலும் காணப்படுகின்றன. தமிழகத்துத் திருநெல்வேலிச் சூழல் போன்றே இங்கும் புவி அமைப்பும் வளம் செறிந்த காணிகளும் காணப்படுதலால் ஒப்புமை நோக்கியும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் ... இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு கோயில்களும் முறையே "வயல்வெளிச் சிவன் கோயில்" , "வயல்வெளி அம்மன் கோயில்" என்று அழைக்கப்படுதல் திருநெல்வேலியிற் பண்டைநாளில் இங்கு வயல்வெளிகள் செறிந்து காணப்பட்டமையை விளக்குகின்றது". (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

ஈழமண்டலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் சைவ சமயத்தைத் தழுபுவர்களாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்கு வந்ததும், ஒல்லாந்தர்கள் தாம் உண்பதற்காக மாட்டிறைச்சிச்சாலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது தமிழ் மந்திரிகளும் , ஈழ மண்டல குடிகளும் அத் திட்டத்தை எதிர்த்தனர். பசு வதை, மற்றும் மாடுகளைக் கொல்வதை சைவ சமயத்தவர்களான ஈழ மண்டல மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வருடங்களின் பின் ஈழ மண்டலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் வருடத்திற்கு ஒரு மாடு அல்லது பசு ஒல்லாந்தர் உண்பதற்குக் கொடுக்க வேண்டுமென ஒல்லாந்தர் ஆணைபிறப்பித்தனர். அவ்வாணையின் படி ஈழத்தின் திருநெல்வேலியில் வசித்து வந்த ஞானப்பிரகாசதேசிகர் முதன்முறைக்குரியவரானார். யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரிய மகாராசனால் திருநெல்வேலியில் குடியிருத்தப்பட்டவர்களின் வழித்தோன்றல் இந்த ஞானப்பிரகாசர். தீவிர சைவ பக்தனான இவர் ஒல்லாந்தருக்கு மாட்டையோ பசுவயோ கொடுப்பது கொடுஞ்செயல் எனக் கருதினார். ஒல்லாந்தர்களுக்கு இறைச்சிக்கு மாடு கொடுத்து இவ்வூரில் வாழ்வதை விட இவ்வூரை விட்டகல்வதே சாலச் சிறந்தது என எண்ணி சிதம்பரத்திற்குச் சென்று குடியேறினார். சிதம்பரம் சென்ற ஞானப்பிரகாசர், "சமஸ்கிருதத்திற் சித்தாந்த சிகாமணி, பிராமண தீபிகையாதியாம், பற்பல கிரந்த நூல்கள் செய்தனரன்றிச் சமஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் சிவஞானசித்தி முதலியவற்றிற்கு உரையுஞ் செய்தனர்'' (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 152)

"சிதம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டினாரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்கண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம், இத்திருக்குளத்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயுள்ளன. தெப்போற்சவ முதலிய சில உற்சவங்களுக்கு சிதம்பராலயத்துச் சுவாமிகள் எழுந்தருளுவது இத் திருக்குளத்துக்கே. இக் குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுப்பிக்க இப்போது யாழ்ப்பாணிகளே பண உதவி செய்து வருகின்றனர்.[இந்துசாதனம்]" (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 153)

ஞானப்பிரகாசரின் "பெயரால் சிதம்பரத்தில் 'ஞானப்பிரகாசர் குளம்', 'ஞானப்பிரகாசர் மடம்' என்பன இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது" (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

அடுத்த பதிவில் அச்சுவேலி பற்றிப் பார்ப்போம். பணிவன்புடன்,
வெற்றி.

Sunday, September 03, 2006

யாழ்ப்பாணத்து ஊர்கள் சில - பகுதி-1

யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், பட்டினங்கள் , நகரங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே உள்ளன. பண்டைய காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதி போலவே ஈழமும் இருந்திருக்கிறது. சேர , சோழ , பாண்டி நாட்டிலிருந்து தமிழர்கள் நினைத்த போதெல்லாம் ஈழத்திற்குப் போவதும், ஈழத்தில் இருந்தவர்கள் சேர, சோழ , பாண்டி நாடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. சேர, சோழ , பாண்டி நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காடாக இருந்த பல இடங்களை மேம்படுத்தி ஊர்கள், பட்டினங்கள் என அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட ஊர்களுக்கும் பட்டினங்களுக்கும் காரணப் பெயரைச் சூட்டியுள்ளனர்.[ஐரோப்பியர்கள் தமிழகத்தில் இருந்த தமிழர் இராச்சியங்களையும், ஈழத்திலிருந்த தமிழர் இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது தமிழக , ஈழ எல்லைகளை மாற்றியமைத்துத் தமிழர்களைப் பிரித்த பின்னரும் ஈழத்தவர்கள் தமிழகம் சென்று திருமணம் செய்வதும், அங்கு குடியேறுவதும், தமிழகத்தில் உள்ளோர் ஈழத்திற்கு வந்து குடியேறுவதும் நடைபெற்று வந்திருக்கிறது.] யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தின் பெயரை ஆய்வு செய்தாலும் அதற்குப் பின்னால் பல சுவையான செவிவழி வரலாற்றுக் கதைகள் உண்டு. அப்படியாக அமைக்கப்பட்ட ஊர்கள், நகரங்களின் பெயர்களையும் அதற்குப் பின்னால் உள்ள செவிவழிக் கதைகளைத் தருவதுமே இப்பதிவின் நோக்கம்.

சரி, இந்த வகையில் முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள இடங்களில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களைப் பார்ப்போம்.

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இவ் இடங்கள் பற்றிய செவிவழி வரலாற்றுக் கதைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்

Sunday, August 27, 2006

'எங்கடை திருவிழா!'

சென்ற வாரம் ஒரு ஒளிப்பேழை வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பக்தர்களின் கூட்டத்தினால் அந்தப் பெரிய மண்டபமே நிறைந்திருந்தது. மேடையில் பூஜை. அதன் பிறகு புகழ் பூத்த நாதஸ்வரக்காரரின் வாசிப்பு; அரை மணி நேரத்தில் எத்தனை அற்புதமாக வாசித்தார்! ஆனால் அதே வேளை, நாதஸ்வரக் குழுவினருக்குப் பின்னால் மேடையிலிருந்த இடைவெளியில் ஓர் அசிங்கமான நாடகமும் அரங்கேறிக் கொண்டிருந்தது. கணத்துக்குக் கணம், இப்புறமும் அப்புறமுமாக 8, 10 பேர் மாறி மாறிப் போவதும் வருவதுமாக... என்ன அவசரமோ பார்வையாளர்களை உறுத்தாமல் அவசரமாகப் போய் வருவதற்காகத்தானே அந்த அரங்கில் மறைவாக திரைச்சேலைக்கும் சுவருக்கும் இடையில் நடந்து போக வழி வைத்திருக்கிறார்கள்? அப்படியிருக்க இந்தப் பெருஞ்சபையில் இப்படி நடந்து கொண்டது கோமாளித்தனமல்லவோ? அல்லது தாமேதான் ஏற்பாட்டாளர்கள் என்பதை வந்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலோ?

எனது சிறுவயதில் எனது கிராமத்துக் கோயில்களில் இரவுத் திருவிழாக்கள் பெரிய மேள, சின்ன மேளக் கச்சேரிகளுடன் விடியும் வரை நடைபெறுவதுண்டு. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு பகுதியார் உபயம்; முதல்நாள் திருவிழாவை அடுத்த நாள் திருவிழா தூக்கிவிடும்! இந்தப் போட்டியிலும் பார்க்க இன்னொரு விஷயம்தான் முக்கியம் - யாருடைய உபயம் என்பதை "பளிச்" என அறிந்து கொள்ளக் கூடியதாக மாறுகரை வேட்டி, இடுப்பில் வரிந்து கட்டிய சால்வை; கழுத்தில் (பெரும்பாலும்) இரவல் சங்கிலி, எண்ணெய் பூசி வாரிய தலை, அன்று "ஷேவ்" செய்த முகம் - காரணம் எதுவும் இல்லாமல் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பார்கள் உபயகாரப் பகுதியினர். "எங்கடை திருவிழா" என்று காட்டத்தான்! சென்ற வாரம் அந்த மேடையைப் பார்த்த போது இந்த நினைவுதான் வந்தது! என்னதான் பக்தி என்று சொல்லிக் கொண்டாலும் "பப்ளிசிட்டி" ஆசை யாரைத்தான் விட்டது!

[ஈழத்தின் எழுத்தாளர் அமரர் திரு. சோமகாந்தன் அவர்கள் எழுதிய நிகழ்வுகளும் நினைவுகளும் நூலிலிருந்து.]

Growing up in shadow of war

ரொரன்ரோவில் இருந்து வெளிவரும் ரொரன்ரோ ஸ்ரார் [Toronto Star] நாளேட்டில் ஈழத்தமிழர்கள் பற்றி வெளிவந்த செய்தியை இங்கே பதிகிறேன். நன்றி.


Young Canadian Tamils find themselves heartsick over the 20-year conflict back in their homeland

Aug. 27, 2006. 01:00 AM SURYA BHATTACHARYA AND THULASI SRIKANTHAN STAFF REPORTERS

The civil war that continues to wrack Sri Lanka is older than some Tamil Canadians who closely follow the carnage in the land of their birth.

Conflict along ethnic lines between the Sinhalese forces of the government and the Tamil minority has raged in the tiny island nation for more than 20 years.

"We've only known civil war since we were children," says Ashwin Balamohan, a member of the Canadian Federation of Students at the University of Toronto.

But these first-generation Tamil Canadians also know life in Canada, with itsaccess to education and jobs and, most of all, an environment of law and order.

"What people forget, despite all the opportunities North America presents to you, there's a part of us that is Sri Lankan," says Jana, 27, who did not want her last name used.

Many young Tamil Canadians maintain a deep attachment to Sri Lanka.

"Even though we have moved here, we haven't changed," says high school student Mayuran Balasingam. "Our roots and families are over there."

Following a joint RCMP-FBI investigation, seven Canadians were arrested recently in the United States and Canada on charges of conspiring to buy weapons for the Liberation Tigers of Tamil Eelam, or Tamil Tigers, which both Ottawa and Washington have labelled a terrorist group.

Two of the accused, Suresh Sriskandarajah and Sathajan Sarachandran, were members of an Ontario student delegation that travelled to parts of Sri Lanka soon after the disastrous Boxing Day tsunami struck in 2004.

Sriskandarajah, who was born in Sri Lanka and moved to Canada with his family in 1989, had also visited his homeland the year before and his website is peppered with beautiful photos from the trip, none of which hint at the conflict, and reminisces of a childhood that seemed almost idyllic.

But in the wake of the tsunami, his observations were markedly different.

"The lack of aid in the northeast bothered me to a great extent," he wrote for a Tamil website. "I did not see much coming from outside during the two weeks I was there."

He revisited an orphanage where he'd spent time on his first trip and was devastated to find of the 170 children, only 30 had survived.

U.S. court documents allege that Sriskandarajah later asked three students to smuggle materials including night-vision goggles and Sparton compasses into Tiger-controlled territory.

Sarachandran was president of the Canadian Tamil Students' Association during the delegation's post-tsunami trip to Sri Lanka and expressed similar dissatisfaction with aid distribution.

Jana is from Waterloo, where at least four of the accused went to university.
"It would change you," she says. "Especially those guys who went during the tsunami, and saw what was happening."

But Balamohan emphasizes that taking up arms is not a popular choice in the community.

And although Jana agrees that she doesn't believe in strife as a means to the creation of a homeland, she adds: "I am sure if I go there, I would walk away completely changed."

Mostly, Balamohan says, young Tamils are frustrated at Canadians' lack of understanding of the situation in Sri Lanka.

"When the Holocaust happened, when Rwanda happened, we called it a failure of humanity," he says. "There is a general recognition that the world shouldn't sit back and let them occur. These things are happening in Sri Lanka and that's why we should care."

The conflict has left 60,000 people dead in a country with a population of about 20 million people, about 74 per cent of whom are Sinhalese.

On Friday, the UN's World Food Program estimated that the fighting has forced at least 204,000 people from their homes in the eastern and northern parts of the island.

Don't provoke Tigers

ரொரன்ரோவில் இருந்து வெளிவரும் ரொரன்ரோ சண் [Toronto Sun] எனும் பத்திரிகையில் வெளிநாட்டுச் செய்திகளை எழுதும் திரு. எரிக் அவர்கள் இன்று [ஞாயிற்றுக்கிழமை] ஈழத்தமிழர்கள் பற்றி எழுதிய கட்டுரையை இங்கே பதிகிறேன். நன்றி.


The Tamils of Sri Lanka are fighting for their independence after decades of oppression
By ERIC MARGOLIS, TORONTO SUN

CALGARY -- This week's arrest of six Canadians of Tamil origin on terrorism charges reminds me of Sir Peter Ustinov's brilliant maxim: "Terrorism is the war of the poor, and war is the terrorism of the rich."

In an apparent rush to U.S. President George Bush's ideology and policies, the Harper government recently added Sri Lanka's Tamil Tigers guerillas to its terrorism list. The U.S. added the group last year.

In 1983, civil war erupted in Sri Lanka after decades of growing strife between majority Sinhalese Buddhists and minority Hindu Tamils. Tamil Tigers guerillas have waged a ferocious, bloody struggle against the Sinhalese government for an independent Tamil state. Over 65,000 Sri Lankans have died. The war continues in spite of foreign mediation.

Sri Lanka's Sinhalese control the army, navy and air force. The Tigers have only small arms, in large part purchased with money raised by Canada's 250,000 Tamils.

Canada's Irish did the same for the IRA. Canadian Jews raised funds to buy arms for Israel's independence struggle from Britain. Sikh separatists in Punjab were funded by Canadian Sikhs.

The Tigers are courageous, highly effective fighters -- call them the Hezbollah of South Asia. They used their bodies as human bombs to fight first the government army, then India when it invaded Sri Lanka in the 1980s in an effort to annex the island. A female Tiger blew up Indian PM Rajiv Gandhi in 1991.

The Tigers are exceedingly brutal and often murderous. They are a fanatical, highly dangerous totalitarian organization. But they are not "terrorists," as the U.S. and now Canada claim.

Terrorism is generally defined as "attacks on civilians for political purposes." Mad dogs who blow up airliners, trains and schools are terrorists, no question. But under this definition, then what do we call the Allied mass slaughter of civilians in Dresden, Hamburg, Tokyo, Osaka, Nagasaki and Hiroshima?

Or Russia's massacre of 100,000 Muslim Chechens a decade ago; Israel's 1982 bombardment of Beirut that killed 18,000 civilians; U.S. destruction in 1991 of Iraq's water treatment plants, creating an epidemic that killed hundreds of thousands of children?

What about the indiscriminate bombing of Afghan villages by U.S., Canadian and NATO forces? Or the recent killing of over 1,000 Lebanese and Israeli civilians, denounced by Amnesty International as a war crime?

Those accusing others of terrorism are often far more guilty of it themselves.

Tamil Tigers ably govern a third of Sri Lanka. Dismissing them as "terrorists" is as meaningless and misleading as calling Hezbollah, which is Lebanon's only effective, non-corrupt government, "terrorist thugs."

Enough with propaganda labels. I detest this deceitful, poisonous term, "terrorism," which has become a propaganda weapon to demonize political opponents.

Canada has recently made itself an enemy of the Muslim world and now faces attacks on its citizens and business interests abroad. This is not a good time to kick the Tamil Tigers hornet's nest. Sometimes it's better to avert your gaze, as previous Canadian governments did, and not seek trouble -- particularly when the Tigers have committed no hostile acts against Canada or the U.S.

Terrorism is a tactic, not a thing. Tamil Tigers are fighting for independence after decades of oppression. We westerners have forgotten that armed resistance to intolerable oppression is a legitimate right of all peoples.

One really must ask why Ottawa is sticking its nose into another remote, bloody foreign war and creating new security problems for Canadians when it can't provide even Second World health care to its own people.

Sunday, August 13, 2006

தெய்வம் [ இக் கவிதையை யாரெழுதியது?]

ஐயம் இல்லை, தெய்வம் உண்டெனப்
பையப் பைய என்னைப் பழக்கி
அன்னை என்னுடைச் சின்ன வயதில்
சொன்னது மட்டும் இன்னும் மறந்திலேன்.
உண்டு என்பதைக் கண்டிலேன் தெளிய.
பண்டை நம் முன்னோர் பகர்ந்ததை யெல்லாம்
படித்துப் பார்த்தேன். பாடமும் கேட்டேன்.
ஒடித்துப் பிரித்து ஊன்றி எண்ணினேன்.
'நீறு பூசினால் நேர்ந்திடும்' என்றார்,
நீறு பூசி என் நேரமும் கழித்தேன்.
'கண்டிகை தரித்தால் காணலாம்' என்றார்,
கண்டிகை கனத்தும் கண்டிலேன் பொருளை.
'நாமம் தரித்தால் நாடலாம்' என்றார்,
நாமம் புனைவதில் நாள்பல கழித்தேன்.
'துளசியும் மாலையும் துணை செயும்' என்றார்,
துளசியும் தொடுத்தேன், மணிகளும் சுமந்தேன்.
'பஜனை செய்தால் பலித்திடும்' என்றார்,
பஜனைக் கோஷ்டியில் பாடினேன் பல நாள்.
'ஊனும் உயிரும் அவனே' என்றார்,
ஊனிலும் காணேன், உயிரிலும் காணேன்.
'கோயிலும் குளமும் குடியிருப்' பென்றார்,
கோயிலில் தேடினேன், குளத்திலும் மூழ்கினேன்.
'வேத நூல்களில் விளங்கிடும்' என்றார்,
வேதமும் கேட்டேன், விளங்கவே இல்லை.
'மந்திரம் கற்றால் வந்திடும்' என்றார்,
மந்திரம் ஜெபித்தேன், தந்திரம் பலித்திலேன்.
'பட்டினி யிருந்தால் பார்க்கலாம்' என்றார்,
பட்டினி விரதம் பழகியும் பார்த்தேன்.
'மூச்சை அடக்கினால் முன்வரும்' என்றார்,
மூச்சைப் பிடித்து முயன்றும் பார்த்தேன்.
கண்டிலேன் அந்தக் கடவுளை; அதனால்,
'பண்டைய வழிகளில் பயனிலை போலும்.
எந்தையர் சொன்ன ஹிந்து மதத்திலே
இந்த ரகசியம் இல்லையோ!' என்று
மதங்கள் என்று மற்றவர் சொன்ன
விதங்களை யெல்லாம் விரித்திடும் நூல்கள்
புத்தகம் பற்பல புரியப் படித்தேன்.
வித்தகர் சொன்ன விளக்கமும் கேட்டேன்.
புதுப்புது வழிகளில் புகுந்து புகுந்து
மதிப்புள எல்லா மார்க்கமும் போனேன்.
செல்லா வழியென எண்ணிநான் சென்ற
எல்லா வழிகளும் என்னைக் கொண்டுபோய்
முன்னே இருந்த மூலையே சேர்த்தன.
என்னே! தெய்வம் எங்கோ! எதுவோ!
இருந்த இடத்தில் இல்லையென் றெண்ணித்
திரிந்த இடத்திலும் தெரிந்திட வில்லையே!
இல்லை யென்றுரைக்கத் தைரியம் இல்லை.
தொல்லையென் றதனைத் துறக்கவும் துணிவிலை.
இல்லையே ஆனால் தொல்லையே இல்லை.
நல்லதே நம்மைக் கேட்பா ரில்லை.
இருப்பது உண்மைதான் எனினு மென்ன?
பொறுப்பு அவர்க்கே, காத்தருள் புரியும்.


உண்ணானச் சத்தியமாய்ச் சொல்லிப் போட்டேன். மேலே உள்ள கவிதையை நான் எழுதவில்லை. இக் கவிதையைப் புனைந்த கவிஞர் தெய்வம் பற்றிச் சொல்லியுள்ள கருத்தே என் கருத்தும் என்பதால் இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.சரி, இக் கவிதையை எழுதியவர் கீழுள்ள கவிஞர்களில் ஒருவர். யாரென சொல்லுங்கள்[ஊகியுங்கள்] பார்ப்போம்.


  1. மகாகவி சுப்பிரமணிய பாரதி
  2. பாவேந்தர் பாரதிதாசன்
  3. உவமைக் கவிஞர் சுரதா
  4. பேரறிஞர் அண்ணாத்துரை
  5. கவியரசர் கண்ணதாசன்
  6. உடுமலை நாராயண கவி
  7. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  8. நாமக்கல் இராமலிங்கம்
  9. கலைஞர் மு. கருணாநிதி
  10. கவிஞர் வாலி
  11. கவிஞர் வைரமுத்து

Wednesday, August 09, 2006

கனேடியப் பிரதமர் ஆலோசகராக பாகிஸ்தானியர்

கனேடியப் பிரதமர் திரு. ஸ் ரீபன் காப்பர் [Stephen Harper] அவர்கள் வழமைக்கு மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரைத் தனது ஆலோசகராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.தற்போது கனடாவில் ஆட்சியிலிருக்கும் அரசு சிறுபான்மை அரசு என்பதை பலர் அறிந்திருப்பீர்கள். கடந்த தேர்தலில் ஸ் ரீபன் காப்பர் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சி [பழைமைவாதக் கட்சி] ஆட்சியிலிருந்த போல் மாட்டின் [Paul Martin] தலைமையிலான லிபரல் கட்சியைத் தோற்கடித்து ஆட்சிபீடமேறியது. ஆனால் கொன்சவேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆட்சியமைக்கப் போதுமான ஆசனங்களை வெல்லவில்லை.

இந் நிலையில் , கடந்த தேர்தல் முடிந்த கையுடனேயே எதிர்க்கட்சியான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. தேர்தல் முடிந்த ஓரிரு தினங்களிலேயே ஒரு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கொன்சவேட்டிவ் கட்சிக்குத் தாவி அமைச்சரானார்.

கடந்த தேர்தலில் ஒன்ராரியோ [Ontario] மாநிலத்தில் உள்ள மிசிசாகா - ஸ்றீற்ஸ்விலே [Mississauga - Streetsville]எனும் நாடாளுமன்றத் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திரு. வஜீட் கான்[Wajid Khan]. இவர் பாகிஸ்தானிக் கனேடியர். இவர் பிறந்து வளர்ந்தது பாகிஸ்தான். பாகிஸ்தானின் விமானப்படையில் விமானியாகப் பணியாற்றியவர். ஆப்கானிஸ்தானில் கடமையில் ஈடுபட்டிருக்கும் கனேடிய இராணுவ வீரர்கள் அங்கு தங்கியிருப்பதற்கான காலத்தை நீடிக்கும் பிரேரணையை கொன்சவேட்டிவ் அரசு நாடளுமன்றத்தில் சமர்பித்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். ஆனால் பிரதமர் காப்பர் அவர்கள் திரு. வஜீட் கான் அவர்களை தென் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் தனது ஆலோசகராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

"கடந்த சில மாதங்களாக லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் [கொன்சவேட்டிவ் கட்சி] இழுப்பதற்காக மிகவும் முனைப்புடன் அவர்கள் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம் " என்கிறார் லிபரல் கட்சித் தலைவரின் பேச்சாளார் திரு. பற் பிறெற்றன் [Pat Breton].

கல்கேரி நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரின் நாடாளுமன்ற செயலாளருமான [PM's parlimentary secretary] திரு .ஜேசன் கெனி [Jason Kenny] அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "முன்னாள் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியான திரு. வஜீட் கான் அவர்கள், கடந்த யூன் மாதத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு, ஆப்கானிஸ்தானில் கடமையில் ஈடுபட்டிருக்கும் கனேடியப் படையினருக்கு அங்கு என்ன செய்ய வேண்டும் என நாம் தயாரிக்க இருந்த திட்டத்திற்கு தாம் உதவ விரும்புவதாகச் சொன்னார். அதன் பின் அவருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, இறுதியாக கடந்த வாரம் பிரதமர் பணிமனையில் அவருக்கு இப் பதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது" என்கிறார்.

இது லிபரல் கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கமல்ல எனவும் நாட்டின் நன்மைக்காக கட்சி பேதமற்று மாற்றுக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படும் முயற்சி எனவும் திரு.ஜேசன் கெனி தெரிவித்தார்.

தான் லிபரல் கட்சியை விட்டு கொன்சவேட்டிவ் கட்சிக்கு தாவப்போவதில்லை என்கிறார் திரு. வஜீட் கான் அவர்கள். ஆப்கானிஸ்தானுக்கு கனேடியப் படைகளை அனுப்புவதை எதிர்த்திருந்த வஜீட் கான் அவர்கள், தான் இப்போது கனேடியப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருப்பதை ஆதரிப்பதாகக் கூறுகிறார். தனது புதிய பொறுப்புப் [பதவி] பற்றி திரு.வஜீட் கான் அவர்கள் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை துவங்குவதற்கு கனடா நடுநிலையாளாராகச் செயற்படலாம் என தான் நம்புவதாகவும் விரைவில் இஸ் ரேல் , லெபனான், எகிப்து, சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்லலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவில் யூதர்கள் முஸ்லிம்களை விட அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். முஸ்லிம் ஒருவர் மத்திய கிழக்கு விவகாரத்திற்கு பிரதமருக்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு யூதர்களின் நிலை இனித்தான் தெரியும்.

Wednesday, August 02, 2006

4 சிங்கள இரானுவமுகாம்கள் தாக்கியழிப்பு

திருகோணமலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நான்கு சிங்கள இராணுவ முகாம்கள் தமிழ்ப்படைகளால்[தமிழீழ விடுதலைப் புலிகள்]தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்மண்ணாக இருந்த திருகோணமலை இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்கள அரசுகள் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து பல பகுதிகளைச் சிங்களமயமாக்கியுள்ளது. தமிழீழத்தின் தலைநகராக திருகோணமலையத்தான் பல ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். சிங்கள இராணுவ முகாம்கள் தாக்கியழிக்கப்பட்ட செய்திகளை அறிய [வரை படங்களுடன்] கீழ் உள்ள சுட்டிகளில் கிளிக் செய்யுங்கள்.
தமிழில் படிக்க
ஆங்கிலத்தில் படிக்க
ரொய்ட்டர் செய்தி
பி.பி.சியில் திருமலைத் தாக்குதல் பற்றி
[4வது தடவையாக புதுப்பிக்கப்பட்டது]

Thursday, July 20, 2006

ரொரன்ரோவில் சென்னை உணவகங்கள்

ரொரன்ரோ நகரில் இருந்து வெளிவரும் ரொரன்ரோ ஸ்ரார் நாளேட்டில் இன்று வெளிவந்த செய்திக்கான இணைப்பை இங்கே தருகிறேன். இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, July 09, 2006

திருத்தம்பலேஸ்வரம் எது?

சிவபெருமான் உறையும் பதி கைலாசம் என்பர். இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரத்துக்கு தெட்சனை கைலாசம் என்ற பெயர் புராதன காலத்திலிருந்தே நிலவி வருகின்றது.போர்த்துக்கீசரால் அன்றைய பெருங் கோயில் இடிக்கப்படுவதற்கு முன் கிழக்காசியாவில் இந்துக்களின் ரோமபுரியாக இக்கோவில் விளங்கியதாக குவைரோஸ் என்ற கத்தோலிக்கத் துறவி தனது பயண நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.திருமந்திரம் அருளிய திருமூலநாயனார் இலங்கையை சிவபூமி என்று கூறுவார். புராண காலத்தை அடுத்த இதிகாச காலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் இராமாயணத்தின் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள லங்காபுரி அரசன் இராவணன் சிறந்த சிவபக்தனாக விளங்கியவராம்.எனவே புராண இதிகாச வரலாறுகளின்படி, பெளத்தத்துக்கு முன்பே இலங்கை முழுவதிலும் சைவ சமயம் நிலவியிருக்கிறது.

இலங்கையில் புகழ்பூத்த புராதனமான ஜந்து சிவஸ்தலங்கள் இருந்ததாகப் பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றது. வடக்கில் நகுலேஸ்வரம்.அங்கு நகுல முனிவர் தவமிருந்து புனித நீரில் நீராடி இறைவனை வழிபட்டதால், சாபங்களிலிருந்து விடுபட்டாராம். சில தசாப்தங்களுக்கு முன்னர் அந்த ஆலயம் புனருத்தாபனஞ் செய்யப்பெற்று சிறப்பாக இயங்கி வந்தது. கீரிமலை செல்லும் பக்தர்கள் அதன் அழகையும் அருளையும் அனுபவித்தனர். சில வருடங்களாக குருக்களே அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டார். அப்பிரதேசமே மக்களில்லாத சூனியப் பிரதேசமானது! நகுலேஸ்வரத்தில் நித்திய நைமித்திகப் பூஜைகள் நடைபெறுவது எக்காலமோ?

சீரும் சிறப்பும் கொண்டு விளங்கி, நாயன்மார்களினால் தேவாரம் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரம், அந்நியராட்சியில் இருந்த சுவடே தெரியாமல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை, காடாகிப் போனது. பல ஆய்வுகளை மேற்கொண்ட நல்லூர் ஆறுமுகநாவலர், இந்த இடத்தைக் கண்டுபிடித்து "சைவத்தின் தேன்பொந்து" அதுவே என ஸ்தாபித்ததுடன், வள்ளல் பசுபதிச் செட்டியாரைக் கொண்டு அரசிடமிருந்து அக்காணியை கொள்வனவு செய்து, சிறு கோவில் அமைத்த பின்னரே அங்கு விளக்கு மீண்டும் எரியத் துவங்கியது. திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபையின் ஓய்வொழிச்சல் இல்லா முயற்சியினால், பெருங் கோயிலாக பின்னர் அது மிளிர்ந்தது. அப்பிரதேசத்தை மீண்டும் தொடர்ந்து இருள் கவ்விக் கொண்டதால் ஒரு தசாப்த காலமாக எவராலுமே அந்தப் பக்கத்தை எட்டிப் பார்க்க முடியாமற் போனது. நாதம் எழுப்பிய கண்டா மணி அறுந்து வீழ்ந்து ஓய்ந்து போய்க் கிடக்கிறது.

பாடல் பெற்ற மற்றொரு சிவத்தலமாகிய திருக்கோணேஸ்வரத்தில் நித்திய நைமித்திக பூசைகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அங்கு செல்கின்ற பக்தர்கள் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்கள் இத்திருத்தலத்தில் அச்சமின்றிக் கூடி பெருமானைத் தரிசிக்கும் நிலை தோன்ற வேண்டும். மற்றொரு புராதன சிவத்தலமாகிய முன்னேஸ்வரம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருவது இன்றைய தலைமுறையினரின் தவமேயாகும்.

புராதன காலத்திலிருந்தே திருத்தம்பேஸ்வரம் என்னும் பெயரில் புகழ்பூத்த சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். அது எது? இருந்த இடம் எங்கே? பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன். தென்னிலங்கையில் கடற்கரையையொட்டினாற் போல உள்ள தேவிநுவர என இப்போது அழைக்கப்படும் ஊரில் கருங்கல்லினாலான சிவனுக்குரிய பெருங் கோவில் முன்னர் இருந்ததாம். தெய்வம் உவந்து உறைந்திருந்தமையால் தெய்வாந்துறையாகி, இது பின்னாளில் தேவி நுகர எனச் சிங்களத்தில் ஆகியதோ? இப்பொழுது அது விஷ்ணு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. பக்கத்தில் பெரிய புத்தர் சிலையும் உயர்ந்து நிற்கிறது. சிவத்தலம் (இதுவே திருத்தம்பலேஸ்வரமெனில்) பின்னாளில் விஷ்ணுத்தலமாக எப்படி மாறியது? ஆய்வறிஞர் அந்தனிசில் மறைந்து போன பல உண்மைகளை அண்மைக்காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருகின்றார். திருத்தம்பலேஸ்வரம் எது என்பதையிட்டு அவர் அக்கறையெடுத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

சோழ அரசர்களும் இலங்கையை ஆண்டார்கள் என்பது வரலாறு. அதனை வெளிப்படுத்தும் வகையில், பொலன்னறுவையில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இரு சிவத் தலங்களைக் காணலாம். 1958 வரை இவ்வாலயங்களில் நித்திய பூஜைகள் நிகழ்ந்து வந்துள்ளன. ஒரு கற் கோவில் ஓரளவு அழிந்து விட்ட போதிலும், அருகிலுள்ள மற்றக் கோவில் அழகிய ஸ்தூபியுடன் விளங்கியது. பொலனறுவையில் தமிழர்கள் சுதந்திரமாகப் பயமின்றி வாழ்ந்த 1950 களில், பங்குனி உத்தர நன்னாளன்று ஆண்டுதோறும் ஊர் வியக்கும் வண்ணம் பெரிய உற்சவம் நடைபெறுவது வழக்கமாயிருந்தது. ஆனால், இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்... சோழர்களும் இங்கு ஆட்சி நடத்தினார்கள் என்ற உண்மையை வரலாற்றிலிருந்து துடைத்தெறிவதற்காகவா அவர்கள் அமைத்த இக் கோவில் பராமுகமாக புனரைமைப்புச் செய்யப்படாமல், பாழடைந்து அழியும்படி கைவிடப்பட்டிருக்கிறது?

[ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு.சோமகாந்தன் அவர்கள் எழுதிய 'நிகழ்வுகளும் நினைவுகளும்' எனும் புத்தகத்திலிருந்து]

Monday, July 03, 2006

இலக்கியத்தில் நகைச்சுவை

எனது ஆன்மீகக் குரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் சைவப்பழம் மட்டுமல்ல, அவர் ஓர் தமிழ்க்கடல் என்பதும் நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது போல், நான் கேட்டு மகிழ்ந்த வாரியார் சுவாமிகளின் "இலக்கியத்தில் நகைச்சுவை" எனும் உரைக்கான சுட்டியை நீங்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் இங்கே இணைக்கிறேன். கேட்டு இன்புற இங்கே கிளிக் செய்யுங்கள்.

மிக்க நன்றி.
அன்புடன் வெற்றி

Saturday, July 01, 2006

அன்பர்கள் கட்டளை ஆறு!

ஆண்டவன் அன்பர்கள் கட்டளை ஆறு. அன்பர்கள் சுகா மற்றும் மலைநாடான் ஆகியோர் என்னை இந்த ஆறுப் பதிவுக்கு அழைத்திருந்தனர். முதலில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நண்பர் சுகா அவர்கள் என்னை அழைத்த பதிவில் SK அய்யா அவர்களையும் அழைத்திருந்தார்கள். SK அய்யா அவர்களும் சுகாவின் அழைப்பை ஏற்று கவிநயத்துடன் பதிவிட்டிருந்தார்கள். SK அய்யாவின் பதிவைப் பார்த்ததும் , பறையாமல்[பேசாமல் என்பதற்கு இணையான யாழ்ப்பாணச் சொல்] நண்பர் சுகாவிடம் எனக்கு விடுத்த அழைப்பைத் திருப்பிப் பெறுமாறு கேட்டுக்கொண்டால் என்ன என ஓர் எண்ணம் உதித்தது. காரணம், SK அய்யா அவர்களின் தமிழ் போல் என்னால் எழுத முடியுமா? அவரின் தமிழறிவுக்கு முன் நான் nothing. நான் இப்படிக் குழம்பியிருந்த நேரத்தில் நாகை சிவா அவர்களின் பதிவு கண்ணில்பட்டது. சரி, அவரின் ஆறுப் பதிவு போல பதிவு போடலாம் என தீர்மானித்தேன். எப்படி எழுதுவதென்பதை முடிவெடுத்த பின் எதை எழுதுவது, எதை விடுவது என்பதில் குழப்பம். எனினும் ஆறுப்பதிவின் விதியை மீறக்கூடாதென்பதற்காக, பிடித்த பல விடயங்களைக் குறிப்பிட முடியவில்லை என்பதையும் இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

சரி இதோ என் ஆறுப் பதிவு.
  1. படித்ததில் பிடித்த தமிழ் நூல்கள்
    1. குறளோவியம்

    2. நூலாசிரியர் : கலைஞர் மு. கருனாநிதி.
    3. சங்கத் தமிழ்

    4. நூலாசிரியர் : கலைஞர் மு.கருனாநிதி
    5. வியாசனின் உலைக்களம்

    6. நூலாசிரியர் : புதுவை இரத்தினதுரை
    7. தொல்காப்பியப் பூங்கா

    8. நூலாசிரியர் : கலைஞர் மு. கருனாநிதி
    9. வனவாசம்

    10. நூலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
    11. அவளும் அவனும்

    12. நூலாசிரியர் : நாமக்கல் இராமலிங்கம்

  2. சந்திக்க விரும்பும் நபர்கள்
    1. வேலுப்பிள்ளை பிரபாகரன்
    2. நெல்சன் மண்டேலா
    3. பழ. நெடுமாறன்
    4. முத்துவேலர் கருனாநிதி
    5. மெல்லிசை மன்னர் விசுவநாதன்
    6. காணாமல் போன என் பால்ய நண்பன்

    7. Nursery வகுப்பிலிருந்து ஆண்டு 6 வரை என்னுடன் படித்த என் அயல்வீட்டு நண்பன். பல வருடங்களுக்கு முன் ஈழத்தில் எமது ஊர் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பல இளைஞர்களை கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். இது வரை இவருக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறாரா என்றே தெரியாது இன்னும் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் இவனை ஈன்றவர்களும் அவனது உடன்பிறப்புக்களும்.

  3. பிடித்த (இந் நூற்றாண்டின்) தமிழ்க் கவிஞர்கள் (பாரதி , பாரதிதாசன் தவிர்த்து)
    1. கவியரசர் கண்ணதாசன் [தமிழகம்]
    2. புதுவை இரத்தினதுரை [தமிழீழம்]
    3. கவிஞர் காசி ஆனந்தன் [தமிழீழம்]
    4. வீரமணி ஜயர் [தமிழீழம்]
    5. நாமக்கல் இராமலிங்கம் [தமிழகம்]
    6. கவிக்கோ அப்துல் ரகுமான் [தமிழகம்]

  4. போனதில் பிடித்த நகரங்கள் (Toronto தவிர்த்து)
    1. யாழ்ப்பாணம் - Jaffna [தமிழீழம்]
    2. நியூயோர்க - New York [அமெரிக்கா]
    3. பாரீஸ் - Paris [பிரான்ஸ்]
    4. கவானா - Havana [கியூபா]
    5. உரோம் - Rome [இத்தாலி]
    6. (f)பிராங்போர்ட் - Frankfurt [ஜேர்மனி]

  5. போக விரும்பும் இடங்கள் (இதுவரை போகாத இடங்கள்)
    1. இந்தியா [தமிழகம்]
    2. எகிப்து
    3. சீனா
    4. எதியோப்பியா
    5. ஸ்பெயின்
    6. பிறேசில்

  6. பிடித்த தமிழ்ப்பாடல்கள்
    குளியலறையில் குளிக்கும் போதும் தனியாக வண்டி ஓட்டிச்செல்லும் போதும் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்கள்
    .(பாடல்களைக் கேட்டு மகிழ பாடல்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.)
    1. கற்பக வல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்

    2. ஈழத்து இசைமேதை வீரமணி அய்யர் அவர்கள், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபிலேசுவரர் ஆலயத்தில் உள்ள இறைவனைப் போற்றி இயற்றிய பாடல். திருமதி விசாலாச்சி நித்தியானந் அவர்களின் குரலில்.
    3. சிறீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா

    4. கவியரசர் கண்ணதாசன், இசைஞானி இளையராஜா, ஜேசுதாஸ் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் உருவானது இப்பாடல்
      .
    5. துள்ளாத மனமும் துள்ளும்

    6. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், A.M.ராஜா, அவரது துணைவியார் திருமதி.ஜிக்கி ஆகியோரின் கூட்டுமுயற்சியில் உருவான பாடல்.
    7. பொன் என்பேன் சிறு பூவென்பேன்

    8. கவியரசர், மெல்லிசை மன்னர்கள், P.B.சிறீனிவாஸ் , திருமதி. ஜானகி ஆகியோரின் கூட்டுமுயற்சியில் வந்த பாடல்
    9. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

    10. பாடலாக்கம் : கவியரசர் , இசை : மெல்லிசை மன்னர், பாடியவர்கள் :- T.M. செளந்தரராஜன், P. சுசீலா
    11. எனக்காகவா நான் உனக்காகவா
  • நான் அழைக்க விரும்பும் அறுவர்.
    1. செல்வராஜ்
    2. சீனு
    3. சுந்தரவடிவேல்
    4. ப்ரியன்
    5. சோழ நாடான்
    6. மணிகண்டன்
  • Thursday, June 29, 2006

    Kidnapped animals

    Between 2000 and 2004, roughly 600 animals were stolen from 80 zoos in the European Association of Zoos and Aquaria, reports USA Today. Only a small number of the often-exotic and even endangered animals are ever found again. Behind the thefts, says John Haywood, coordinator of Britain's National Theft Registry for Exotic Animals, is black-market demand from private collectors around the world. [Source : The Globe and Mail - June 29, 2006. ]

    Sunday, June 18, 2006

    நடிகர் திலகத்தின் ஆதங்கம்

    "ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். நான் இதையெல்லாம் கடந்தவன். ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் உரிய விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என் மனதில் ஓரத்தில் இருக்கத்தான் செய்கின்றன."

    1977-ம் ஆண்டு நடிகர்திலகம் அளித்த பேட்டியென இச் செய்தியை 26-2-2003 அன்று வெளிவந்த தேவி வார இதழ் 47வது பக்கத்தில் போட்டிருந்தது.

    அன்பர்களே, தமிழ்மணத்தில் பதிவுகளை ஏற்ற ஆகக் குறைந்தது 3 பதிவுகளாவது எழுத வேண்டும் எனும் நிபந்தனையால் தேவி வார இதழில் வந்த செய்தியை இங்கே பதித்தேன். நடிகர் திகலத்திற்கு உரிய நேரத்தில் விருது வழங்கப்படவில்லை என்பதில் எனக்கும் ஆழ்ந்த வருத்தம் உண்டு.

    அமெரிக்க, கனடா வாழ் தமிழ்மக்களுக்கு!

    அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் நற்செய்தி. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை [Federation of Tamil Sangams of North America - FETNA] வருடா வருடம் நடாத்தும் தமிழர் விழா இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களில் இவ் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ் விழா ஒவ்வொரு முறையும் July முதல் வார இறுதியில் நடைபெறும். July மாதத்தின் முதல் வார இறுதிநாட்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் Long Weekend என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல் இம்முறையும் இவ் விழா July 1 - 3 வரை நடைபெறுகிறது.

    இம்முறை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

    இவ் விழாவில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், திருமணம் ஆகாத காளையர்கள் , கன்னியர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளவும் இங்கே ஓர் நிகழ்ச்சி உள்ளது. அந் நிகழ்ச்சியில் பங்கு பெற நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    ஆக, இது நல்லதொரு விழா. தவற விடாதீர்கள்.

    Thursday, June 08, 2006

    Quotes of the Day : சும்மா - 1

    எனக்குத் தெரிந்த தமிழறிவை தக்க வைத்துக் கொள்ளவும், என் தமிழறிவை வளர்க்கவும் தான் நான் தமிழ்மணத்தில் இணைந்தேன். இணைந்தது ஏப்பிரல் மாதத்தில். ஆனால் இது வரை ஒரு பதிவும் எழுதவில்லை. காரணம் என்ன எழுதுவதென்று குழப்பம். சரி, என்னைப் பற்றி சுருக்கமாக ஓர் அறிமுகப் பதிவை எழுதுவோமென்றால், ஆகக் குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதினால்தான் பதிவுகள் தமிழ்மணத்தில் ஏற்றப்படும் என நிபந்தனை வந்தது. ஒரு பதிவுக்கே இவ்வளவு சிரமப்படும் போது, மூன்று பதிவுக்கு நான் எங்கே போவது!. ஒரே ஒரு வழி cut & paste தான். எனக்கு Quotes விரும்பிப்படிக்கும் பழக்கம் உண்டு. அதனால படித்ததில் பிடிதத Quotes ஜ இங்கே பதிகிறேன்.
    நன்றி.

    அன்புடன்
    வெற்றி

    "I have not failed. I've just found 10,000 ways that won't work."
    - Thomas Alva Edison

    "Never give up on something that you can't go a day without thinking about."
    - Unknown

    "Its not whether you get knocked down. Its whether you get up again."
    - Vince Lombardi

    "Never regret. If it's good, it's wonderful. If it's bad, it's experience. "
    - Victoria Holt, writer

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it."
    -Voltaire