Thursday, May 10, 2007

சில புகைப்படச் செய்திகள்

அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் [Richard Boucher] அவர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் [Robert O' Blake] அவர்களும் யாழ்ப்பாண நூல்நிலயத்தின் பல்கணியில்[balcony] நிற்பதை மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். படத்தின் பின் புறத்தில் தெரிவது தந்தை செல்வாவின் நினைவுச் சிகரம்.


இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்
யாழ்ப்பாண ஆயர் வணபிதா தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுடன் யாழ் நிலமைகள் பற்றிக் கேட்டறிந்தார் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள். யாழ் நூல்நிலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள் யாழ்ப்பாண அரச அதிபர்[Jaffna Government Agent] திரு. கணேஸ் அவர்களை அரச அதிபர் பணிமனையில் சந்தித்து யாழ் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாண அரச அதிபர் கணேசுடன் அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட்பெளச்சர்.
இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் கொழும்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவைச் சந்தித்த போது எடுத்த படம்.
கொழுப்பு நகரம் புலிகளின் வான்படைத் தாக்குதலினால் இருள்மயமான போது கொழும்பில் வசிக்கும் மக்கள் வீதியில் வந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
கொழும்பில் புலிகளின் வான் தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர்.
அன்பர்களே, இது வானவெடி வேடிக்கைகள் இல்லை. கொழும்பில் புலிகளின் வான்படைகள் தாக்கிய பின்னர் சிங்களப் படைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் வான் நோக்கிச் சுடுவதையே படத்தில் காண்கிறீர்கள்.
அண்மையில் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில் புலிகளின் பிரதிநிதிகளை பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு அழைப்பது எனவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த பிரிட்டன் உதவும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இனியும் இலங்கை பிரிட்டனின் குடியாதிக்க நாடு இல்லையெனவும் பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் வற்புறுத்தி சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பி கொழும்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவராலயம் முன் நடாத்திய கண்டனப் பேரணியையே படத்தில் காண்கிறீர்கள்.
பிரிட்டனுக்கு எதிரான கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் மகளிர் அணி.
புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் சில ஈழத்தமிழர்களை பிரான்சு அரசு அண்மையில் கைது செய்து இருந்தது. தமிழர்களைக் கைது செய்ததற்கு பிரான்சுக்கு நன்றி தெரிவித்து கொழும்பில் புத்த பிக்குகள் நடாத்திய ஊர்வலம்.
சிங்கள அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழ் நகரமான வவுனியாவில் கொலை செய்யப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்த தமிழரின் சடலத்தை இலங்கைப் பொலிஸார் பார்வையிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் நிருபரைச் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. அவரின் இறுதிச் சடங்கில் அவரது தாயார் கண்ணீர் வடிக்கும் காட்சி.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படையின் தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்தையும் அங்கே சிங்களப் படைகள் காவல் காப்பதையும் படத்தில் காண்கிறீர்கள்.
இப் படங்கள் எடுத்த தளங்கள் :- Tamilnet, AFP

3 comments:

said...

சும்மா :-))

said...

சில படங்களை பார்க்கும் போது வேதனையாகத் தான் உள்ளது.

said...

மனதில் வேதனையூட்டும் படங்கள். அப்பப்பா! மனிதன் உலகத்தைச் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கிறான்.