Tuesday, August 14, 2007

பெனாசீர் பூட்டோவின் நேர்காணல் வீடியோ

பாகிஸ்தான்[1947],இந்தியா[1947], இலங்கை[1948] போன்ற நாடுகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் சுதந்திரம் அடைந்தன. முறையே ஜின்னா, நேரு, D.S. செனநாயக்கா போன்ற தலைவர்கள் தமது நாடுகளில் ஆட்சி அமைத்தனர்.

ஆனால் இந்த மூன்று தலைவர்களிலும் அண்ணல் நேரு அவர்களே தொலைநோக்குப் பார்வையுடன் தனது நாட்டை வழிநடாத்தினார். இன்று இலங்கையும் பாகிஸ்தானும் உருப்படாத நாடுகள் [failed state] எனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு அந்த நாடுகளின் முதல் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகளே முக்கிய காரணம்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவெனின், இந்த மூன்று தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரே[same] சிக்கல்களையே எதிர்கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் அண்ணல் நேரு அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் மற்றைய தலைவர்களை விட அதிகம். ஆனாலும், அண்ணல் நேரு அவர்கள் இச் சிக்கல்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் கையாண்டதால் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தலைதூக்கிய பல சிக்கல்கள் இந்தியாவில் எழவில்லை.

அண்ணல் நேரு அவர்கள் இலங்கையில் பிறந்திருந்தால்.... நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இருந்தது போல சிங்கப்பூரை விட முன்னணி நாடாக இருந்திருக்கும்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்கள் தற்போதைய பாகிஸ்தான் நிலைமைகள், இன்ன பிற விடயங்களைக் கனேடிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார். இப் பேட்டி 18 நிமிடங்கள் நீளமானது.அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தமது நாடுகளின் அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய, பாகிஸ்தானிய நண்பர்களுக்கு என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

2 comments:

said...

பெனாசீர் பூட்டோவின் கூற்று உண்மை போலதான் தெரிகிறது

said...

மாயா,
கருத்துக்கு நன்றி.