Monday, March 05, 2018

காடுகள் மலைகள் தேவன் கலைகள்



கடந்த வருடம் [July 2017] அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு உல்லாசப் பயணம்
சென்றிருந்த போது Moose Pass எனும் ஊரில் எடுத்த படம்.

Monday, September 01, 2008

ஒபாமா (Barack Obama) - ம.தி.மு.க தலைவர் வைகோ சந்திப்பு (புகைப்படம்)

அண்மையில் சிகாகோவில்(Chicago)நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா (Barack Obama)அவர்கள் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து அளவளாவிய போது எடுக்கப்பட்ட படம்.




"Yes, we can" எனும் தலைப்பில் ஒபாமா பற்றித் தான் எழுதிவரும் புத்தகத்தின் draft copy ஐ [draft copy ஐ தமிழில் எப்படிச் சொல்வது/எழுதுவது?] ஒபாமாவிற்கு வைகோ அவர்கள் காண்பித்த போது எடுக்கப்பட்ட படம்.




பிற்குறிப்பு:
செய்தியும் படங்களும் தமிழ்நெற்றிலிருந்து (www.tamilnet.com) எடுக்கப்பட்டவை.

Tuesday, October 23, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல : ஹிலறி கிளின்ரன் [Hillary Clinton]

இன்று வெளிவந்த [ஐப்பசி 23, 2007] லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போன்ற விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கும் வேறுபாடுகள் உண்டு எனவும் அவர்களின் நோக்கங்கள் வேறுபட்டவை எனவும் திருமதி.ஹிலறி கிளின்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலம் காலமாக பல விடுதலை அமைப்புக்கள் தமது இலக்கை அடைவதற்கு சில பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது வரலாறு என்றும் இருப்பினும் அவை பயங்கரவாத அமைப்புக்களாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். அடக்கு முறைகளை எதிர்த்துப் போராடும் போராட்ட அமைப்புக்களையும், அடிப்படைவாத அமைப்புக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் அமெரிக்கர்கள் விட்ட தவறு என்னவெனின், விடுதலைப் போராட்ட அமைப்புக்களையும் , அடிப்படைவாத அமைப்புக்களையும் வேறுபடுத்தாது எல்லா அமைப்புக்களையும் ஒன்றாக வரையறுத்ததுதான்" எனவும் சொன்னார் திருமதி ஹிலறி கிளின்ரன்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் மற்றைய சில விடுதலை அமைப்புக்கள் பற்றியும் சொன்ன தகவல்கள் கீழே [கார்டியன் நிருபரின் கேள்வியும் ஹிலறியின் பதிலும்]:

Yeah. Do you think that the terrorists hate us for our freedoms, or do you think they have specific geopolitical objectives?

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

முழுப் பேட்டியையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Friday, October 12, 2007

படித்ததில் பிடித்த கவிதை வரிகள்

அண்மையில் சில கவிதைகளை வாசிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்படி நான் வாசித்த கவிதைகளில் நேசித்த அல்லது மனதை நெகிழ வைத்த சில வரிகள் கீழே.


சாருமதியின் "சுனி ஒரு கலகக்காரி" என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள்.

சீதையைப் பாயச் சொன்னான்
தீயுக்குள் இராமன்
தனக்கும் அந்த
நியாயத்தைப் பிரயோகிக்காமல்

இந்திரனுக்கு ஏமாந்தவள்
அகலிகை மட்டும் தானா?
இல்லையே!
தபோமுனியும்
தவறிழைத்தான் தானே?
ஆனால்,
தண்டிக்கப் பட அகலிகை
தண்டிக்கக் கெளதமன்
இது என்ன நியாயம்?

மாதவியும்
மனிதப் பிறவி தானே!
கானல் வரி பாடி
அவளை
வேசை யென்று சொல்லி
விட்டு விலகிப் போன
கோவலன் மட்டு மென்ன
கற்புக்கு அரசனா?


ஈழத்துக் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இவர் வறுமையில் பிறந்து வறுமையிலே வளர்ந்தவர். இவரின் இள வயதுடைய சொந்தமகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். அவளது வையித்திச் செலவுக்குக் கூட கவிஞரிடம் பணம் இருக்கவில்லை. தன் அருமை மகள் இறந்ததும் இயற்றிய , "கண்ணீர் அஞ்சலி" எனும் தலைப்பில் அமைந்த பாடல்கள் நெஞ்சை உருக்கும். அதிலிருந்து சில வரிகள்.

மல்லிகையின் மலர்தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்!
எள்ளுப் பொரி தூவி இறைக்கும் நாள் வந்ததையோ!
முல்லைப் பூச்சூடி முகமலர நாள் பார்த்தேன்
அல்லி விழிமூடி அழுத இதழ்மூடி
வெள்ளைத் துகில்மூடி மேனியிலே மலர்மூடி
சொல்லாது நீ போகும் துயரநாள் வந்ததையோ


Thursday, October 11, 2007

கனேடியத் தொலைக்காட்சியில் M.I.A -- வீடியோ

கனேடிய தொலைக்காட்சியான CBC யில், The Hour எனும் நிகழ்ச்சியில் M.I.A கலந்து சிறப்பித்த நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக செய்யவும்.

நன்றி : CBC

கனடா வலைப்பதிவர் கவனத்திற்கு ...

நீங்கள் கனடாவில் வசிப்பவரா?
வீட்டில் தொலைக்காட்சி வைத்திருப்பவரா?
தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வைத்திருக்கிறீங்களா?
நீங்கள் hip-hop/reggae வகைப் பாடல்களை விரும்பிக் கேட்பவரா?
நீங்கள் M.I.A எனும் பாடகியின் இரசிகரா/இரசிகையா?

மேலே உள்ள கேள்விகளுக்கு 'ஓம்' எனப் பதிலளித்தால், உங்களுக்கு ஒரு உவகையான செய்தி.



இன்று இரவு 11 மணிக்கு[EST] CBC யில் The Hour எனும் நிகழ்ச்சியில் M.I.A கலந்து சிறப்பிக்கிறார். பார்த்து மகிழுங்கள்.

நீங்கள் கனடாவில் ஒன்ராரியோ[Ontario] மாநிலம் தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிப்பின், The Hour நிகழ்ச்சி உங்கள் பகுதிகளில் நடைபெறும் நேரத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள். நிகழ்சி நேரங்கள் பகுதிக்குப் பகுதி வேறுபடலாம்.



The Hour நிகழ்ச்சியின் இணையத் தளம்
இதோ!

Wednesday, October 10, 2007

சேதுக்கால்வாய் திட்டத்தால் ஈழத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை

சேதுக்கால்வாய் திட்டம் பற்றி இலங்கை, இந்தியா போன்ற இரு நாடுகளிலும் பலதரப்பட்ட மக்களும் குழம்பிப் போய் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருப்பது போலத் தெரிகிறது.அல்லது தாம் சார்ந்த நம்பிக்கைகள்,கொள்கைகள்,பொருளாதார நலன்களுக்காக ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறர்கள்.

இத் திட்டம் பற்றி நானும் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். இத் திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமெனின் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. ஆனால் இத் திட்டத்தால் ஈழத்தில் உள்ள தமிழ் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமோ எனவும் ஐயமாக இருக்கிறது.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பல தீவுகள்[கிட்டத்தட்ட 70 தீவுகள் உண்டாம்] தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உண்டு. இப்படியான சில தீவுகளில் [நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு etc] மக்கள் வசித்து வருகின்றனர். இத் தீவுகள் சேதுக்கால்வாய்த்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளூக்கு மிக அண்மையில் உள்ளன.அதனால் இத் தீவுகள் இத் திட்டத்தால் பாதிப்படையுமோ என அச்சமாக உள்ளது.

நான் இப்படிக் குழம்பிப்பேய் ஒரு தெளிவில்லாமல் இருப்பதால், இத் திட்டம் பற்றி வரும் பல கட்டுரைகளைத் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். அப்படிப் படிக்கும் போது மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால் அவரின் தளத்தில் இவ் விடயம் தொடர்பாக எழுதப்பட்ட சில கட்டுரைகளளப் படிக்க நேர்ந்தது. அவரின் கட்டுரைகளின் படி இத் திட்டத்தால் ஈழத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை எனச் சொல்கிறார்.

திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் கட்டுரைகளை இங்கே இணைப்பதற்கு நான் அவரிடம் அனுமதி பெறவில்லை. அதனால் இணைக்கவில்லை.

அவர் இது தொடர்பாக எழுதிய கட்டுரைகளை இங்கே[அவரின் தளத்தில்] படிக்கலாம்.


சேதுக்கால்வாய்-ஈழத் தமிழர் தொடர்புடைய சுட்டிகள்:

1.சேதுக்கால்வாய் திட்டத்தால் ஈழத் தமிழர் பெறும் நன்மைகள் :
பேராசிரியர் பத்மநாதன், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.

2.சேதுக் கால்வாய் - சிங்களவரின் அச்சங்கள்:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

3.சேதுக் கால்வாயும் சுற்றுச் சூழலும்:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

4.சேதுகால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

Tuesday, October 09, 2007

கவிதை::: கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர்

தமிழனே!
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ?
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகிற் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்?

விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம்
கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும்.
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குச் சென்று
சாதனை படைத்தானே,
அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன்
இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான்.
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்.
நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது
ஜப்பான்காரன் "எக்ஸ்போ" நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்.

என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.
உன் தலையில் மட்டும்
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்.
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.
அதுவும் அன்னியராலல்ல...
உன்னவரால்.

நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.
குண்டெறிபவன் வேறு யாருமில்லை.
கூடப்பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்.

கராம்பும், கறுவாவும் வாங்கத்தான்
பீரங்கியோடு புறப்பட்டு வந்தான் வெள்ளைக்காரன்.
வந்தவனுக்கு உந்தன் வரலாறு தெரிந்ததும்
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.

பாஞ்சாலங் குறிச்சியில் மட்டும்
ஒருவன் பணிய மறுத்தான்.
வெள்ளைக்காரனால் அவனை விழுத்த முடியவில்லை.
பக்கத்திருந்த பாளையக்காரன்
அவனும் தமிழன்,
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்.

வன்னியிலும் இதே வரலாறுதான்.
வெள்ளைக் கொக்குகளுக்கு எதிராக
கறுப்புக் காகமொன்று கச்சை கட்டியது.
துரத்தித் துரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்.
வன்னியனை வளைத்துப் பிடிக்க முடியவில்லை.
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை
அவனும் தமிழன்.
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.

அத்துடன் முடிந்ததா அந்த வரலாறு?
இல்லையே... இன்றும் தொடர்கிறது.
எல்லோரின் தோள்களிலும்
இன்று சூரியன் சுடர்கிறது.
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்.
என்ன விதியடா உனக்கு?


சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துக் கவிஞர்களில் 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன் அவர்களும் புதுவை இரத்தினதுரை அவர்களும் பாரதியும், பாரதிதாசனையும் போன்றவர்கள். மேலே உள்ள கவிதை கவிஞர் புதுவை இரத்தினதுரையின் படைப்பு. இக் கவிதை மிகவும் நீளமானது. அந்த நீளமான கவிதையில் இருந்து சிறு பகுதியை மட்டுமே மேலே இணைத்துள்ளேன்.